10ம் ஆண்டு நினைவஞ்சலி


அமரர் முருகன் இராசையா
1934 -
2010
வல்வெட்டித்துறை ஊரிக்காடு, Sri Lanka
Sri Lanka
Tribute
0
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். வல்வெட்டித்துறை ஊரிக்காட்டைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த முருகன் இராசையா அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் பத்தாகி விட்டன.
அப்பாவின் வாசனையோ என்னும் போகவில்லை.
அன்பு என்ற சொல்லுக்கு அர்த்தம் நீங்கள் அப்பா!
அப்பா இல்லையே என்ற ஏக்கங்கள் இருந்தாலும்
உங்கள் நினைவுகள் என்றும் இனிமை அப்பா!
தந்தைக்கு தந்தையாகவும்,
தாய்க்கு தாயாகவும்,
தோழனுக்கு தோழனாகவும்
தோள் கொடுக்கும் அந்த தோள்களை
நாங்கள் இழந்து விட்டோம் அப்பா!
காலத்தால் அழியாத கோலங்கள்
நீங்கள் அப்பா!
மீண்டும் ஒரு ஜென்மம் இருந்தால்
உங்கள் பிள்ளைகளாக நாங்கள்
பிறக்கும் வரம் வேண்டும் அப்பா!
அன்பான கணவனாய், நல்ல தந்தையாய்,
நல்ல நண்பனாய், பாசமான சகோதரனாய்
வாழ்ந்து எம்மை ஆறாத் துயரில் ஆழ்த்திச் சென்ற
உங்கள் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கின்றோம். .
தகவல்:
மகன்- இராஜேஸ்வரன்
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute