
யாழ். மாதகல் பற்றிமா வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மேரி றோசலின் குணசேகரம் அவர்கள் 18-04-2025 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சந்தியாப்பிள்ளை, விசிறித்தம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற அருளப்பு, அந்தோனியாப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற அல்போன்ஸ் குணசேகரம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற லூர்தம்மா(புஸ்பம்) அவர்களின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற சந்தியாப்பிள்ளை அவர்களின் அன்பு மைத்துனியும்,
யுடெற் குணசீலி கேட்டி(சுவிஸ்) அவர்களின் அன்புத் தாயாரும்,
கொண்செப்ரா(சூட்டி- நோர்வே) அவர்களின் அன்பு சிறிய தாயாரும்,
காலஞ்சென்ற கிறிஸ்தோத்திரம்(G.S கிருபா), டொன் ராஜன்(நோர்வே) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பிருந்தா, ஜொகானஸ்(சுவிஸ்), கிறிஸ், சிசிலி, மெரிற்றா, கிறிஸ்ரியான், கிறிஸ்வின், தெயா(நோர்வே) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
அருட்தந்தை பேடினன் அவர்களின் அன்பு மாமியாரும்,
மத்தியாஸ், தாவித், அலெக்ஸ்சாண்டர் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 22-04-2025 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10.00 மணியளவில் அவரது இல்லத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டு மு.ப 10:30 மணியளவில் மாதகல் புனித தோமையார் ஆலயத்தில் நல்லடக்க திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் மாதகல் புனித தோமையார் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details