Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 02 MAY 1962
இறப்பு 28 NOV 2020
அமரர் மேரி ரஞ்சினிகுமாரி வலன்ரைன் ஜோர்ஜ்
தேசிய லொத்தர்சபை விநியோகஸ்தர்
வயது 58
அமரர் மேரி ரஞ்சினிகுமாரி வலன்ரைன் ஜோர்ஜ் 1962 - 2020 இறம்பைக்குளம், Sri Lanka Sri Lanka
Tribute 10 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

வவுனியா இறம்பைக்குளத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மேரி ரஞ்சினிகுமாரி வலன்ரைன் ஜோர்ஜ் அவர்கள் 28-11-2020 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அல்பிரட் செபஸ்ரியானா தம்பதிகளின் கனிஷ்ட புதல்வியும், காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை, மலர் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற வலன்ரைன் ஜோர்ஜ்(தனா) அவர்களின் அன்பு மனைவியும்,

லின்டுஷா(Centre for Human Rights and Development- Accountant), மிரின் தனோஜன்(SLLM Final Year) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற கொலஸ்ரிக்கா, மனோ(லண்டன்), ஜெயராணி(முன்னாள் பிரதி அதிபர் வவுனியா விபுலானந்தாக் கல்லூரி), ராணி(வவுனியா), மணி(லண்டன்), ராஜ்குமார்(லண்டன்), வதி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்ற நிக்கலஸ், ஜீன்(லண்டன்), காலஞ்சென்ற அந்தோனிமுத்து(முன்னாள் இலங்கை வங்கி முகாமையாளர்), எட்மன்(சென் யோசவ் கடை உரிமையாளர்), நெவில்(லண்டன்), வசந்தி(லண்டன்), தேவதாஸ்(லண்டன்), ராணி, வசந்தி, வசந்தன், காலஞ்சென்றவர்களான நிரூபன், நிமலன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

தவா(இலங்கை), சுதா(லண்டன்), ஜூடியா, அனிக்கா(லண்டன்), ஜெனி(கனடா), ரோனி(இலங்கை), நிம்மி, தர்மி, சிரோமி, சர்மி(இலங்கை), ரெறன்ஸ்(லண்டன்), ஷோன், டேறியன்(லண்டன்), டுஷான், றோசான், சோபி(லண்டன்), அல்வின்(லண்டன்) ஆகியோரின் அருமை அத்தையும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல்  30-11-2020  திங்கட்கிழமை அன்று மு.ப 09:30 மணியளவில் அவரது இல்லத்திருந்து எடுத்துச் செல்லப்பட்டு இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் இறம்பைக்குளம் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.      

தகவல்: பிள்ளைகள்