Clicky

நன்றி நவிலல்
பிறப்பு 17 APR 1954
இறப்பு 17 FEB 2020
அமரர் மருதப்பு கனகலிங்கம்
கொழும்பு வர்த்தகர்
வயது 65
அமரர் மருதப்பு கனகலிங்கம் 1954 - 2020 புங்குடுதீவு 6ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும்,கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் திரு. மருதப்பு கனகலிங்கம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

முப்பத்தொரு நாட்கள் அகன்றோடி விட்டாலும்
அழியாத நினைவுகள் எம் அடிமனதின்
ஆழத்தில் இருந்து வதைக்கின்றதே அப்பா

அன்பாலும் பண்பாலும் எமை வளர்த்த
பண்பு நிறைந்த தந்தையே பாசத்தின் ஊற்றே
துன்பத்தை உமக்குள் புதைத்து இன்பத்தை எமக்குள்
விதைத்த தந்தையே உம் நினைவால் துடிக்கின்றோம்!
தவிக்கின்றோம் இன்றுவரை நாமப்பா

அந்தி சாய்ந்து விட்டால்
முந்தி அப்பா இருக்கிறார் என்ற ஆறுதல்!
இப்போ!
யாரும் இல்லையே அப்பா
எமக்கு ஆறுதல் கூற
கூவிடும் எங்கள் குரல் கேட்டு
ஓடி வாருங்கள் அப்பா
தேடி எத்தனை செல்வங்கள் இருந்தும்
தெய்வம் நீங்களில்லாது என்ன பயன்??
தேயாத உங்கள் நினைவுகளோடு பயணிக்கின்றோம்!!

எம்மை ஆறாத் துயரில் ஆழ்த்தி மீளாத் துயில் கொண்ட மருதப்பு கனகலிங்கம் அவர்களின் பிரிவுச் செய்தி கேட்டு, நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசி, மின்னஞ்சல், சமூக வலைத்தளங்கள் ஆகியவை மூலமாக எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், இறுதி நிகழ்வில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியவர்களுக்கும், சகல நிகழ்வுகளிலும் எம்முடன் கைகோர்த்து இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த உற்றார், உறவினர், நண்பர்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்னாரின் அந்தியேட்டிக்கிரியை 16-03-2020 திங்கட்கிழமை அன்று மு.ப 06:00 மணியளவில் முகத்துவாரம் தீர்த்தக்கரை சங்கமத்தில் நடைபெறும்.


இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 5 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.