Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 23 OCT 1948
மறைவு 10 OCT 2024
அமரர் மார்க்கண்டு பேராயிரவன்
வயது 75
அமரர் மார்க்கண்டு பேராயிரவன் 1948 - 2024 அராலி தெற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 7 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். அராலி தெற்கு வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மார்க்கண்டு பேராயிரவன் அவர்கள் 10-10-2024 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு பெரியம்மா தம்பதிகளின் ஏக புதல்வனும், மட்டுவில் வடக்கைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சிவசம்பு யோகாம்பிகை தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

சிவபாக்கியம் அவர்களின் அன்புக் கணவரும்,

ரஜனி, பிரதாபன், ஜெயதீபன், குமரன் ஆகியோரின் அருமைத் தந்தையும்,

சத்தியன், பிரதீபா, டிவாகரி, தர்சினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ரெஷ்மி, அருணா, ஜஸ்னவி, ரெஷ்னா, பிரணவி, கார்த்திகன், அன்பினி, கீர்த்திகன் ஆகியோரின் ஆசைப் பேரனும்,

காலஞ்சென்ற நகுலேஸ்வரி, நகுலேஸ்வரன், கேதீஸ்வரி, விக்கினேஸ்வரன், கணேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற ராசமணி, தம்பாபிள்ளை, சாந்தநாயகி, காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை, மங்கையற்கண்ணி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 13-10-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 09:00 மணியளவில் பூனாவோடை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

வீட்டு முகவரி:
அராலி தெற்கு,
மாதாங்கோவிலடி.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

வீடு - குடும்பத்தினர்

Photos

No Photos

Notices