யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை வடமேற்கு பெரியதம்பிரான் கோவிலைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொம்பனித்தெரு, வெள்ளவத்தை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மார்க்கண்டு அருமைத்துரை அவர்கள் 11-08-2026 செவ்வாய்க்கிழமை அன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பொன்னையா, மீனாட்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிவகங்கை அவர்களின் அன்புக் கணவரும்,
சுபாகரன், தாரணி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காயத்திரி, குகபரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அருண்முகேஸ், கிருத்திகேஸ், ஹரிபூரணி, லக்ஷனா, அவிஷ்ணா ஆகியோரின் பாட்டனும்,
காலஞ்சென்ற குகதாசன்(பிரித்தானியா), சண்முகதாசன்(யாழ்ப்பாணம்), புஷ்பரஞ்சினி(பிரான்ஸ்), தவரஞ்சினி(கொழும்பு), தவமணி(யாழ்ப்பாணம்), முருகதாஸ்(மட்டக்களப்பு) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
செல்வரஞ்சினி(பிரித்தானியா), செல்வதேவி(யாழ்ப்பாணம்), சிவானந்தமூர்த்தி(பிரான்ஸ்), பஞ்சாட்சரசிவம்(கொழும்பு), வீரகத்திப்பிள்ளை(யாழ்ப்பாணம்), கயல்விழி(மட்டக்களப்பு) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 12-08-2026 புதன்கிழமை அன்று பி.ப 03:00 மணி முதல் 07:00 மணிவரை மற்றும் 13-08-2026 வியாழக்கிழமை அன்று மு.ப 07:00 மணி முதல் 01:00 மணிவரை Jayaratne Funeral Parlour, Borella யில் பார்வைக்கு வைக்கப்பட்டு, அதனைத் தொடர்ந்து 13-08-2026 வியாழக்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று பின்னர் பொரளை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Mobile : +94777563094
- Mobile : +94764300916
- Mobile : +94728263047