Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 11 MAY 1955
இறப்பு 24 DEC 2020
அமரர் மரியறாணி சலீன் மருசலீன் 1955 - 2020 முல்லைத்தீவு, Sri Lanka Sri Lanka
Tribute 27 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

முல்லைதீவு செல்வபுரத்தைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி மற்றும் பிரித்தானியாவை வதிவிடமாகவும் கொண்ட மரியறாணி சலீன் மருசலீன் அவர்கள் 24-12-2020 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி  நீக்கிலாப்பிள்ளை(வெள்ளைசிங்கர்) தம்பதிகளின் மூத்த புதல்வியும், காலஞ்சென்ற திரு. திருமதி ஞானபிரகாசம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

மருசலீன்(குண்டுமனி) அவர்களின் பாசமிகு மனைவியும்,

நேசன், கலா, காலஞ்சென்ற அருன் ஆகியோரின் பாசமிகு அன்னையும்,

அன்ரனி, அல்பிரட், லில்லி, மேரி, செபத்தி, யேசு, குலம், பூமணி, ராசன், ரெஜி ஆகியோரின் சகோதரியும்,

சாந்தன், ஜமுனா ஆகியோரின் பாசமிகு மாமியும்,

ஜெறிக், ஷியான், ஷைறா, ஜெரிசியா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய தகவல் பின்னர் அறியதரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்