

யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மாரிமுத்து சுந்தரம்பிள்ளை அவர்களின் 25ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்புடைத்தோன்றல் எங்கள் அப்பா
பாசம் கொண்டு அழைத்திடும் அன்பு தந்தையே
அன்புமயமாய் வந்த அருமை மாமாவே
பாசமிகு தாத்தாவே அன்பு அப்பப்பாவே
தேசம்விட்டு பிரிந்து
ஆண்டு இருபத்தைந்து கடந்து போனதுவோ
நேற்றுப்போல் நினைவுகள் நிறைகின்றன
பேரன்பும் பெருங்கொடையுமாய் கிடைத்த அப்பாவின்
கோடி நினைவுகள் நித்தம் கண்களை நிறைக்குதே
ஒன்றாய் உடனிருந்துவாழ்ந்த காலங்கள் எமக்கு
ஏற்றமிகு இனிய பொற்காலங்கள்
கடின உழைப்பதனை உயர்வாய்கொண்டு
வளமாய் வாழ்ந்திட வழிகாட்டியாய்
எல்லோரும் இன்புற்று வாழ்தல் வேண்டுமென்ற
உயர்ந்த மனசு கொண்டவராய்
ஒப்பற்ற எங்கள் இல்லத்தின் குடும்ப தலைவராய்
திகழ்ந்தவர் என்றும்அம்மாவோடு ஒன்றாய் கலந்து
வளமான வாழ்வுக்கு நல் ஆசிகளை வழங்கிவரவேண்டுமென
இறையடிதொழுது தந்தையின் திருவடி
வணங்கி நினைந்து கொள்கின்றோம்.
ஓம்சாந்தி.