யாழ். சித்தங்கேணியைப் பிறப்பிடமாகவும், உடுவில் லவ் லேனை வசிப்பிடமாகவும், கொட்டாஞ்சேனையை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட மாரிமுத்து கிருஷ்ணானந்தன் அவர்கள் 13-09-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற மாரிமுத்து தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரனும், காலஞ்சென்ற துரைச்சாமி லோகாம்பாள் தம்பதிகளின் மருமகனும்,
கிரிதரன்(லண்டன்), குருபரன்(கொட்டாஞ்சேனை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சுகந்தி(லண்டன்), கார்த்திகா(கொட்டாஞ்சேனை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கிருஷான், அனோஜன், விசாலிகா, விதுஷன் ஆகியோரின் அன்பு அப்பப்பாவும்,
காலஞ்சென்றவர்களான பத்மாவதி, கமலாவதி, மற்றும் லீலாவதி, மாணிக்கவாசகர்(மனோ- ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 16-09-2026 புதன்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் பொரளை ஜெயரட்ண மலர்சாலையில் நடைபெற்று அதனைத்தொடர்ந்து பி.ப 02:00 மணியளவில் பொரளை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Mobile : +447927192070
- Mobile : +94779952750
- Mobile : +447879822061
- Mobile : +94786385644