-
22 OCT 1935 - 23 NOV 2019 (84 age)
-
பிறந்த இடம் : சிங்கப்பூர், Singapore
-
வாழ்ந்த இடங்கள் : மாதகல், Sri Lanka கொழும்பு, Sri Lanka
சிங்கப்பூரைப் பிறப்பிடமாகவும், மாதகல், கொழும்பு, வவுனியா கற்குழி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மனோரஞ்சிதம் புண்ணியமூர்த்தி அவர்கள் 23-11-2019 சனிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற அம்பலவாணர் - செல்லம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும், காலஞ்சென்ற கந்தையா - மனோன்மணி தம்பதிகளின் மூத்த மருமகளும்,
காலஞ்சென்ற புண்ணியமூர்த்தி அவர்களின் அன்பு மனைவியும்,
தர்மராஜன்(பொறியியலாளர், கனடா), ஆனந்தராஜன்(கணக்காளர், Mount Breeze Hotel - கொழும்பு), இந்திராணி(வவுனியா), ஜெயராஜன்(மென்பொருள் பொறியியலாளர், லண்டன்), ரவிராஜன்(சிரேஷ்ட பேராசிரியர், பெளதிகவியற்றுறை, யாழ். பல்கலைக்கழகம்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
நற்குணசிங்கம், பரமேஸ்வரி, காலஞ்சென்ற ஜெயலட்சுமி, தனலட்சுமி(அவுஸ்திரேலியா), நாகராஜா, மகேந்திரராஜா, தனபாலசிங்கம்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
வாசுகி(கனடா), தயாளினி(ஆசிரியர் - அல ஹீகமா கல்லூரி, கொழும்பு - 12), காலஞ்சென்ற ஸ்ரீகணேஷ்(இளைப்பாறிய சிரேஷ்ட உதவி முகாமையாளர், ஸ்ரீலங்கா ரெலிக்கொம், வவுனியா), ஞானகுமாரி(சாந்தி - லண்டன்), வாசுகி(ஆசிரியர், யாழ்.சுண்டுக்குளி மகளிர் கல்லூரி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சிவபாக்கியம், தவமணி, துரைசிங்கம், காலஞ்சென்ற இராமசாமி, புவனேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கஜானி, சரண்யா, ஜாதவன், ஜாவன்னியா, பிரசாந்தினி, தர்சிகா, கீர்த்தனா, சாள்ஸ், ஆகாஷ், சர்வேஷ் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 25-11-2019 திங்கட்கிழமை அன்று பி.ப 01:30 மணியளவில் 92, கற்குழி, வவுனியா இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 03:00 மணியளவில் இறம்பைக்குளம் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.