5ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
0
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். இருபாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மனோன்மணி இராசையா அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டைந்து போனதம்மா
அன்னையுனை நாம் பிரிந்து
மாண்டழிந்து போனாலும்
மறக்க மாட்டோம் எம் அன்னையை!
வெயிலுக்கு நிழலானாய்
மழைக்கு குடையானாய்
தாகத்துக்கு நீரானாய்
சோகத்துக்கு மடியானாய் - அம்மா!
ஆண்டு ஐந்து நொந்து
நொந்துதான் கரைய
எங்கள் கண்ணோர விழி நீரும்
இன்னும் காயாமல் போகின்றதே!
கூடிய உறவுகளோ தாயேயுன்னை
வாடிய முகத்துடன்
தேடியல்லோ திரிகின்றார்!
என்றும் அழியாத ஓவியமாய்
இந்த நிலம் இருக்கும் வரை
உன் நினைவிருக்கும் எம் மனதில்!
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute