

யாழ். அல்வாய் தெற்கு கவிஞர் செல்லையா வீதியைப் பிறப்பிடமாகவும், அல்வாய் வடக்கு வீரபத்திரர் கோவிலடியை வசிப்பிடமாகவும் கொண்ட மாணிக்கம் அருளானந்தன் அவர்கள் 23-08-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மாணிக்கம் தெய்வானை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நடேசு கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற ஸ்ரீபதி அவர்களின் அன்புக் கணவரும்,
அமுதா, அறிவழகன்(பாபு), அருள்மொழி(பிரியா- லண்டன்) ஆகியோரின் அருமைத் தந்தையும்,
ஜெயச்சந்திரன், ரஞ்சினிதேவி, ஸ்ரீதரன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
அம்பிகைபாகன், காலஞ்சென்ற அழகானந்தன்(முன்னாள் இ.போ.ச சாரதி- முல்லைத்தீவு), அனந்தராசன்(ஓய்வுபெற்ற இலங்கை மின்சாரசபை உத்தியோகத்தர்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மஞ்சரி, கவித்தூரிகா, மிருதுளன், ஆராதனா, அக்ஷயா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 24-08-2020 திங்கட்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அல்வாய் பங்கு வேம்படி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.