யாழ். புலோலியைப் பிறப்பிடமாகவும், உடுப்பிட்டியை வதிவிடமாகவும் கொண்ட மாணிக்கம் ஆனந்தராசா அவர்களின் அந்தியேட்டி வீட்டுக்கிருத்திய அழைப்பிதழும், நன்றி நவிலலும்.
எம்மை ஆறாத் துயரில் ஆழ்த்தி மீளாத் துயில் கொண்ட மாணிக்கம் ஆனந்தராசா அவர்களின் பிரிவுச் செய்தி கேட்டு, நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசி, மின்னஞ்சல், சமூக வலைத்தளங்கள் ஆகியவை மூலமாக எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், இறுதி நிகழ்வில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியவர்களுக்கும், சகல நிகழ்வுகளிலும் எம்முடன் கைகோர்த்து இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த உற்றார், உறவினர், நண்பர்களுக்கு எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் சிவபேறு குறித்த அந்தியேட்டி கிரியைகளும் வீட்டுக்கிரியைகளும் 10-10-2020 சனிக்கிழமை அன்று மு.ப 05:30 மணியளவில் கிரியைகள் எமது இல்லத்தில் நடைபெற்று பின்பு கீரிமலை புனித தீர்த்தக்கரையிலும் நடைபெற உள்ளது.