

யாழ். பருத்திதுறை புலோலி மேற்கு நாவலடியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Reutlingen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மங்களேஸ்வரி திருச்செல்வமூர்த்தி அவர்கள் 21-06-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபாதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மு. பொ. கந்தசாமி செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பொன்னையா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற திருச்செல்வமூர்த்தி அவர்களின் பாசமிகு மனைவியும்,
பிரேம்குமார், அசோக்குமார், சதீஸ் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
குலவீரசிங்கம் அவர்களின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற ராஜேஸ்வரி மற்றும் மகேஸ்வரி, செல்வநாயகம், செல்வராணி, பரமேஸ்வரி, சிவபாலன், கனகாம்பிகை, தெய்வநாயகி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
நந்தினி, சபிதா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சினுஜா, மகாலிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.