
யாழ். ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மனவல் வஸ்ரியாம்பிள்ளை அவர்களின் 25ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்னார், ஊர்காவற்துறையைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான மனவல் திரேசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ஞானப்பிரகாசம் சூசன் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சந்தணமலர் வஸ்ரியாம்பிள்ளை அவர்களின் பாசமிகு கணவரும்,
பிறெக்ஸிடா, தியூச்சின், கிளன்ஷி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஜெனிபர், அஞ்சனா, யேசுதரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஜெவோண், ஜெனானி, சாம்எஸ்லி, சேபா, ஆருஜி பால்டன் ஆகியோரின் அன்புப் பாட்டனாரும் ஆவார்.
ஒளிர்கின்ற ஒளிவிளக்காய் நின்றீர்- எம்
இல்லத்தின் இருள் அகற்றி வைத்தீர்- நல்
இனிய இதயத்து அன்பாலே எம்மைக்
கருத்துடனே கண்மணிபோல் காத்து வளர்த்தீர்
முத்தான முழுநிலவாய் நின்று- உற்றாரை
உறவினரை உவகை கொள்ள வைத்தீர்
சத்தான பரம் பொருளை சடுதியில் சார்ந்து- சென்றீரே
நாம் இவ்வையகத்தில் வாழும் காலம் எல்லாம்
உம்மைத் தலை வணங்கி வாழ்த்துகிறோம்
போற்றுகிறோம் எந்நாளும் எம் நெஞ்சில்
இவரின் பாசத்தால் துயருறும் மனைவி, மக்கள்,
மருமக்கள், பேரப்பிள்ளைகள், உற்றார், உறவினர்.
Prayer for the soul