Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 24 DEC 1968
இறப்பு 24 JAN 2021
அமரர் மலர்மதி ஸ்ரீசைலேந்திரன் (மைனா)
யாழ் வேம்படி மகளிர் கல்லூர் 87/ AL - 84/OL பிரிவு பழைய மாணவி
வயது 52
அமரர் மலர்மதி ஸ்ரீசைலேந்திரன் 1968 - 2021 உரும்பிராய், Sri Lanka Sri Lanka
Tribute 328 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், இந்தியா, பிரித்தானியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், தற்போது கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட மலர்மதி ஸ்ரீசைலேந்திரன் அவர்கள் 24-01-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். 

 அன்னார், மனோகரன்(இளைப்பாறிய யாழ். இந்துக்கல்லூரி ஆங்கில ஆசிரியர்) மலர்சோதி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வைத்திய கலாநிதி வேலாயுதபிள்ளை பத்மேஸ்வரி தம்பதகளின் அன்பு மருமகளும்,  

ஸ்ரீசைலேந்திரன் அவர்களின் ஆருயிர் மனைவியும்,  

தூனகை, ஸ்ரீகரேந்திரன், தாரகை ஆகியோரின் பாசமிகு தாயாரும்,  

மதியழகி(பிரித்தானியா), மதியரசி(பிரித்தானியா), மதிமன்னன்(பிரித்தானியா) ஆகியோரின் அருமை சகோதரியும், 

கரிஸ்சந்திரா(பிரித்தானியா), சுரேஸ்குமார்(பிரித்தானியா), தயாழினி(பிரித்தானியா), சுதாமதி(கனடா), Dr. அமரநாதன்(இலங்கை), முரளீதரன்(பிரித்தானியா), கோபி மனோகரன்(இலங்கை), கணேசானந்தன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும், 

காலஞ்சென்ற சுரேஸ்குகேந்திரா,  Dr. துஷ்யந்தி(அவுஸ்திரேலியா), மாயா(பிரித்தானியா), தாரணி(நீதிபதி- இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகலியும்,  

லக்ஸ்மன், பிரியா, காலஞ்சென்ற கிருஷ்ணா, மீரா, திவ்யா, சஞ்ஜீவ், சுருதி, ஆருத்திரன் ஆகியோரின் ஆசை சித்தியும்,  

 ஓவியா, அருண்மொழி, ஆதிரை ஆகியோரின் அன்பு பெரியம்மாவும். 

 துவாராகா அவர்களின் பாசமிகு மாமியாரும் ஆவார். 

நாட்டின் தற்போதைய Covid 19 சூழ்நிலை காரணமாக அன்னாரின் திருவுடல் 31-01-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று  பி.ப 07:00 மணிமுதல் பி.ப 09:00 மணிவரை குடும்ப உறுப்பினர்களுடன் மட்டுமே பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் 01-02-2021 திங்கட்கிழமை அன்று மு.ப 06:00 மணிமுதல் மு.ப 08:00 மணிவரை கிரியை நடைபெற்று பின்னர் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்