மரண அறிவித்தல்
Tribute
4
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், உரும்பிராயை வதிவிடமாகவும் கொண்ட மாலா உருத்திரபாலன் அவர்கள் 17-07-2021 சனிக்கிழமை அன்று உரும்பிராயில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பஞ்சலிங்கம் அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற இரத்தினசபாபதி, யோகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
உருத்திரபாலன் அவர்களின் ஆருயிர் அன்பு மனைவியும்,
மதீசன் அவர்களின் அன்புத் தாயாரும்,
சுஜாதா அவர்களின் பாசமிகு சகோதரியும்,
சுதர்சன் அவர்களின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 18-07-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 07:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 09:00 மணியளவில் உரும்பிராய் வேம்பன் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்