
அமரர் கந்தையா செல்லையா
யாழ். அளவெட்டி தெற்கு கலைநகரைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அதிபர் அமரர் கந்தையா செல்லையா 40வது ஆண்டு நினைவஞ்சலி.
அமரர் மாசிலாமணி செல்லையா
யாழ். அளவெட்டி தெற்கைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஆசிரியை அமரர் மாசிலாமணி செல்லையா அவர்களின் 32ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு 40 ஆனதுவோ
உங்கள் முகம் கண்டு
ஏற்க முடியவில்லை உங்கள் இழப்பை
எம் கண்களில் ஈரம்
நிரந்தரமானதோ என்னவோ……
பாதி வழிதனிலே
விதி வந்து பிரித்ததுவோ?
பரிதவித்து நிற்கின்றேன்
விரைந்தோடி வருவீர்களோ!
இன்று நம் கண்ணீர் நிறைந்த
கண்கள் உம்மை தேட
எம் மனமோ உங்களின்
அன்புக்காய் ஏங்கித் தவிக்கிறதே!
பாவிகள் நாங்கள் உங்கள்
நினைவில் பரிதவித்து
நிற்கின்றோம் இன்று..
ஆறாத காயமாக நின் மாய மறைவு -எம்
மனதை மீளாத துயரத்துடன்
உறவுகள் நாம் உம்மை
எண்ணி ஏங்குகின்றோம்!!
உங்கள் நினைவோடு
வாழ்ந்து கொண்டிருக்கும்
குடும்பத்தினர்..!!!