
யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி கந்தசாமி கோவிலடியை வசிப்பிடமாகவும், ஜேர்மனி Kleve ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மகேந்திரன் கந்தசாமி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஓராண்டு ஆனாலும்
உள்ளம் எல்லாம் தேம்புதையா
மனதினிலே நினைவுகளை
மறக்காமல் தந்துவிட்டு
மாயமாய் மறைந்து சென்றாயே!
அன்பிற்கும் பாசத்திற்கும்
கருணையுள்ளத்திற்கும் உரித்தான
எங்கள் மகேந்திரா முருகக் கடவுளாய்
என் வாழ்வில் வந்தாயே
நிழல் போல் இருந்தவன் நீ
நினைவாய் மாறினாய்
கண் இமைக்கும் நேரத்தில்
கண்ணீர் துளியாகி
இதயங்கள் எல்லாம் நொறுங்கிட
இமைகளெல்லாம் நனைய
எங்களை தவிக்கவிட்டு
எங்கே நீ பயணமானாய்
ஆண்டுகள் ஒன்று ஓடி மறைந்ததப்பா ஆனாலும்
எங்கள் கண்களில் வழிந்தனீர் காயவில்லையே!
எம்முயிரான எங்களப்பாவே!
உங்களை நினைக்கும் போது வரும் கண்ணீரை
நாங்கள் துடைத்தாளும்
எங்கள் இதயத்தின் வலி நிரந்தரமானது
நீங்கள் எங்களி விட்டு பிரிந்தாலும்
எங்கள் நினைவுகளில் இருக்கின்றீர்கள்
எங்கும் போகவில்லை நீங்கள்
எங்கள் இதயங்களின் வாழ்கின்றீர்கள்
என்றாவது ஒருநாள்
நாம் சந்தித்துக் கொள்வோம்
மிகவும் உங்கள் நினைவுகளில் வாடும் மனைவி பிள்ளைகள்