Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
பிறப்பு 25 NOV 1931
இறப்பு 07 AUG 2023
திருமதி மகேஸ்வரி பீதாம்பரம் (திருப்பதி டீச்சர்)
சங்குவேலி மகா வித்தியாலயம்- ஓய்வுபெற்ற தமிழ் ஆசிரியை
வயது 91
திருமதி மகேஸ்வரி பீதாம்பரம் 1931 - 2023 உடுவில், Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், சங்குவேலி, அவுஸ்திரேலியா Melbourne ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மகேஸ்வரி பீதாம்பரம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

அம்மா அம்மா உன்
அரவணைப்பு இன்றியே
மாதம் ஒன்றை
நாங்கள் தொலைத்தோமே
அன்பானதாயே அழகான
 புன்னகைத்தாயே

பண்பானதாயே எங்களின்
பணிவானதாயே
அமுதூட்டி நல்அறிவூட்டி
பாசம்காட்டியதாயே

காலன் எங்களிடமிருந்து
 அழைத்து சென்றே
போனது அம்மா காலத்தின்
 சூழலோடு இங்கு

நாங்களும் தவிக்கிறோம்
ஆத்மசாந்திக்கா
 பிராத்திக்க முடியவில்லையே
இந்த உலகத்தை
எங்களுக்கு காட்டிய அம்மா

எதை மறந்தாலும்
நாமுமை மறப்போமா அம்மா
ஏழேழு ஜென்மத்துக்கும்
 நீயே எம்தாயே அம்மா
பணிவின் சிகரமாக
பண்பில் நல் உருவமாகவே
வாழ்ந்தாய் இன்று
எம்மனகண்ணில் வாழ்கிறாயே

அம்மாவின் துயரத்தில்
 பங்குகொண்டு எம்மோடு
கூடிநின்று ஆறுதல்
 கூறியோருக்கும் நன்றிகள்...!

ஆத்மசாந்திக்கா
 இறைவனிடம் வேண்டுவோம்..

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 10 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.