Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
பிறப்பு 16 FEB 1947
இறப்பு 21 APR 2022
அமரர் லூர்துமலர் ஞானராஜா
வயது 75
அமரர் லூர்துமலர் ஞானராஜா 1947 - 2022 நாரந்தனை, Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே என்னிடம்
நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வார்.
                                                யோவான் 11:25 

யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், வவுனியா சூசைப்பிள்ளையார் குளம் லூட்ஸ்வாசத்தை வசிப்பிடமாகவும் கொண்ட லூர்துமலர் ஞானராஜா அவர்களின் நன்றி நவிலல்.

அன்பை ஊட்டி அறிவுக்கு வழிகாட்டி துன்பத்திலும், இன்பத்திலும்,
எம்மைக் காத்து வழிநடத்தி எமக்குரிய சகல நன்மைகளுக்கும்
ஈடு இணையாக இருந்து உறவினில் கலந்த என் அன்னையே
உங்கள் உறவிற்காக ஏங்குகின்றோம் அம்மா!

எம்மையெல்லாம் நீங்காத நினைவில் தவிக்கவிட்டு
எம்மை விட்டு பிரிந்து 31 நாள் ஆகிவிட்டதே அம்மா!
இறைவனின் பாதவடிவில் நிரந்தர இளைப்பாற்றிக்காகச்
சென்ற எங்கள் அன்புத் தெய்வமே அம்மா!

31 நாள் அல்ல ஓர் ஆயிரம் ஆண்டுகள் சென்றாலும்
நாம் உம்மை மறவோம் அம்மா!
தாங்காத துயரோடு தவிக்கின்றோமே அம்மா!
தரணியில் உம்மை எப்போ காண்போம் அம்மா!

உம் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்னாரின் ஆன்ம இளைப்பாற்றிக்காக இறம்பைக்குளம் புனித அந்தோனியர் ஆலயத்தில் 21-05-2022 சனிக்கிழமை அன்று காலை 6.00 மணிக்கு ஒப்புக் கொடுக்கப்படும். திருப்பிலியில் பங்கு கொண்டு செபிக்குமாறு உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். அதனைத் தொடர்ந்து எமது இல்லத்தில் நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம். 

முகவரி:
இல. 116/A,
லூட்ஸ்வாசம்,
சூசைப்பிள்ளையார் குளம்,
வவுனியா.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 6 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.