யாழ். காரைநகர் களபூமியைப் பிறப்பிடமாகவும், காரைநகர் புதுரோட், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட லீலாவதி சண்முகநாதன் அவர்களின் 8ம் ஆண்டு நினைவஞ்சலி.
அம்மா
உங்களை போல் ஒரு தெய்வம்
எங்கேயும் நாங்கள் காணவில்லை!
அன்பிற்கில்லா உங்களைபோல்
தாயை நாங்கள் பார்க்கவில்லை!
அன்பிற்கு ஓர் அடையாளமாய்
எம்மை அரவணைத்த அன்னையே
என்றும் அணையாத சுடராய்
எல்லோர் மனதிலும் வாழ்ந்து
கொண்டு இருக்கிறீர்கள்
அம்மா எட்டு ஆண்டுகள்
உருண்டு ஓடினாலும் உங்கள்
அன்பு நினைவுகளுடன் நாங்கள் ..!
தாயே நாங்கள் வாங்கும் மூச்சும்
நாங்கள் பேசும் பேச்சும்
உங்களையே நினைத்திருக்கும்!
எங்கள் வரவிற்காய் காத்திருக்கும்
உங்கள் விழிகள் ஏன் இன்று உறங்குகிறது
உங்கள் செவிகளுக்கு கேட்கவில்லையா?
எங்கள் தனிமையின் அழுகுரல்கள்
அம்மா அம்மா என்று கனவுகள் கூட
கலையலாம் ஆனால் உங்கள் நினைவுகள்
என்றும் எங்கள் மனதை விட்டு கலையாது!
உங்கள் ஆத்மா சாந்திபெற
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!
தொடர்புகளுக்கு
- Mobile : +447984929159