Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
தோற்றம் 07 MAR 1943
மறைவு 16 JUL 2024
திருமதி குணரத்தினம் சரஸ்வதி (உருக்குமணி)
வயது 81
திருமதி குணரத்தினம் சரஸ்வதி 1943 - 2024 துன்னாலை, Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். துன்னாலை சந்திரவளவு கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு விசுவமடு புதிய புன்னைநீராவியை வதிவிடமாகவும் கொண்ட குணரத்தினம் சரஸ்வதி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

அம்மா முப்பத்தொன்று நாட்கள் 
 கரைந்ததம்மா உன்
அன்பு முகம் எம் இதயங்களை விட்டு
 இன்னும் கரையவில்லை அம்மா!
நீங்கள் எங்களை விட்டு
 அகலவில்லை அம்மா!
எங்களோடு தான்
 வாழ்கிறார்கள் அம்மா!
 பூவை விட்டு மணம் பிரியாது
 நீரை விட்டு அலை பிரியாது
 எம் இதயங்களை விட்டு என்றும்
 பிரியாத தாய் நீயம்மா!
இன்றோ அழுது புரண்டு தவிக்கின்றோம்
 கேட்கவில்லையாம்மா!
ஆயிரம் சொந்தங்கள் அணைத்திட
இருந்தாலும் உன்னை போன்று
அன்பு செய்ய யாரும் இல்லையம்மா
இவ் உலகில்...உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிரார்த்திக்கும்..!

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

அமரர் குணரத்தினம் சரஸ்வதி அவர்களின் அந்தியேட்டிக்கிரியை 13-08-2024 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 07.00 மணியளவில் கீரிமலை புனித தீர்த்தக்கரையிலும், அதனைத் தொடர்ந்து 15-08-2024 வியாழக்கிழமை அன்று ந.ப 12.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் சபிண்டீகரண வீட்டுக்கிருத்தியமும் ஆத்மசாந்திப் பிரார்த்தனையும் நடைபெறும். அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் கலந்து கொள்ளும் வண்ணம் அன்புடன் வேண்டுகின்றோம்.

வீட்டு முகவரி:
புதிய புன்னைநீராவி,
விசுவமடு. 

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 8 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

கண்ணீர் அஞ்சலிகள்