

யாழ். இளவாலை மயிலங்கூடலைப் பிறப்பிடமாகவும், இங்கிலாந்து Coventry ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த குணலிங்கம் காஞ்சனா அவர்களின் 8ம் ஆண்டு நினைவஞ்சலி.
பத்துமாதம் மடிசுமந்து
பக்குவமாய் பெற்றெடுத்து
பாலோடு பாசத்தையும் ஊட்டி
கண்களைப் போல் எமைக்காத்து
கண்ணியமாய் வாழவைத்த அன்புத்தாயே!
கண்ணில் அழுகை ஓயவில்லை
நெஞ்சம் உன்னை மறக்கவில்லை
நேசம் என்றும் நிலைத்திருக்க
பாசத்தை தந்து பறித்தெடுத்தவனே!
எம்மை எல்லாம் அன்பாலும் பண்பாலும்
அரவணைத்து எம்மை வழிநடத்திய
அந்த நாட்கள் எம் நினைவலைகளில்
என்றும் சுழல்கிறதே அம்மா!
அன்பும் ஆதரவும் கொண்ட எங்கள் அன்புச்
சகோதரியே காஞ்சனா !
ஆண்டுகள் எட்டு ஓடி மறைந்தாலும் எம்
உள்ளங்களில் இன்றும்
ஓளிவிளக்காகத் தான் பிரகாசித்துக் கொண்டு இருக்கின்றீர்கள்
எங்கள் வாழ்க்கையில் ஒவ்வொரு கணப்பொழுதிலும் – நீங்கள்
எங்கள் மீது காட்டிய அன்பு, பாசம், பரிவு அனைத்தையும்
பசுமையாக இன்றும் உணர்கின்றோம் - அன்புத் தெய்வமே !
நீங்கள் எங்கள் சகோதரியல்ல – அன்புத்தாய் அம்மா !
உங்கள் பசுமையான நினைவுகளை
எங்களால் மறக்க முடியவில்லை அம்மா
நினைவில் எம்முடனும் நிஜத்தில்
இறைவனிடமும் கலந்திட்ட உங்கள் ஆத்மா
சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
உங்கள் பிரிவால் வாடும்
பிள்ளைகள், சகோதரர்கள்
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
தொடர்புகளுக்கு
- Contact Request Details
One year ago, on this saddest day, you have gone to the place from where no one ever back. I can’t explain what is going through me. You are missed every day and every moment. I hope you are doing...