Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 11 DEC 1948
இறப்பு 19 AUG 2020
அமரர் குமாரசேகரம் பத்மநாதன்
வயது 71
அமரர் குமாரசேகரம் பத்மநாதன் 1948 - 2020 திரியாய், Sri Lanka Sri Lanka
Tribute 9 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

திருகோணமலை திரியாயைப் பிறப்பிடமாகவும், திருகோணமலையை வசிப்பிடமாகவும் கொண்ட குமாரசேகரம் பத்மநாதன் அவர்கள் 19-08-2020 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற குமாரசேகரம், வேதாத்தை தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வரும், காலஞ்சென்ற சபாரெத்தினம், விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

விமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

ஷாந்தினி(லண்டன்), சுபாதரன், கிஷாந்தினி(லண்டன்), குகாந்தன்(அபிவிருத்தி உத்தியோகத்தர், கமநல அபிவிருத்தி திணைக்களம் திருகோணமலை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

புஸ்பநாதன்(ஓய்வுபெற்ற கிராம சேவகர்- திரியாய்), காலஞ்சென்ற கோபாலகிருஷ்ணன், கிருஷ்ணமூர்த்தி(நிதி ஆலோசகர்), தில்லைநாதன், உருத்திரமூர்த்தி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கௌஷிகன்(லண்டன்), கேதீஸ்வரி(பிரான்ஸ்), குணேந்திரன்(லண்டன்), யசோதினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சரோஜினிதேவி, சிவஞானேஸ்வரி(கனடா), அஜந்தகுமாரி, சிவசாந்தினி, நளாயினி(பிரான்ஸ்), காலஞ்சென்ற ஏகாம்பரம், சுலோசனாதேவி, கனகசிங்கம், இராசமணி, மயில்வாகனம், நவரெத்தினராசா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

விபுலன்(பிரான்ஸ்), சுவர்க்கா(லண்டன்), நர்மதா, ஸ்ரீஸ்கந்தகுமார்(கனடா), தனுஷா(பிரான்ஸ்), நிருபன்(கனடா), ஜெயந்த், திலுஜா, சர்விகா, பேராதனன், தவேந்திரா ஆகியோரின்ன் பாசமிகு பெரியப்பாவும்,

யருஷி(லண்டன்), சிந்துகி(லண்டன்), ஷாருகி(லண்டன்), மோனிஷ், ரிதாங்கி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 20-08-2020 வியாழக்கிழமை அன்று பி.ப 04:00 மணியளவில் திருகோணமலை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Fri, 18 Sep, 2020