யாழ். சுழிபுரம் பத்திரகாளி கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட குமரேசு பொன்னுத்துரை அவர்கள் 25-03-2021 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற குமரேசு, சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகனும், தருமலிங்கம் சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற பத்மலோஜினி அவர்களின் அன்புக் கணவரும்,
அருள்மொழி(ஆசிரியை- புத்தூர் சோமஸ்கந்தா கல்லூரி), சுதாகரன்(ஆசிரியர்- மகாஜனாக் கல்லூரி, தெல்லிப்பளை), காலஞ்சென்ற கிருபாகரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சிறிக்காந்தன்(தி/ கந்தளாய் பேராறு பரமேஸ்வரா ம.வி.), சியாமளா ஆகியோரின் அன்பு மாமனும்,
காலஞ்சென்ற மயில்வாகனம், சரஸ்வதி, நமசிவாயம், இராசமணி மற்றும் ஈஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற சுப்பலட்சுமி மற்றும் சற்குணம், மகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பிரவிநாத், தமிழினி, தரணியா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 26-03-2021 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் திருவடிநிலை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.