Clicky

மரண அறிவித்தல்
மண்ணில் 14 NOV 1942
விண்ணில் 29 OCT 2022
அமரர் குமாரசாமி விமலாதேவி
வயது 79
அமரர் குமாரசாமி விமலாதேவி 1942 - 2022 திருகோணமலை, Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

திருகோணமலை மடத்தடியைப் பிறப்பிடமாகவும், யாழ். கந்தரோடை சுன்னாகத்தை வதிவிடமாகவும் கொண்ட குமாரசாமி விமலாதேவி அவர்கள் 29-10-2022 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சிவசம்பு, இராசமணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கதிர்காமசிங்கம், காமாட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற குமாரசாமி அவர்களின் அன்பு மனைவியும்,

சத்தியபாலகெளரி, ஸ்ரீபாலதேவி, ஸ்ரீபாலசண்முகம், ஸ்ரீபாலரஞ்சினி, ஸ்ரீபாலரோகிணி, ஸ்ரீதரன், கெளரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

அன்னைபூபதி(ஜேர்மனி), நகுலேஸ்வரி(ஜேர்மனி), காலஞ்சென்ற அருந்தவதேவன், ஜெயகுமாரி(ஜேர்மனி), கேதாரணி(ஜேர்மனி), ரஜிதா(பிரான்ஸ்), நிமலராஜன்(லண்டன்), நிரஞ்சன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சுந்தரசிவம்(ஜேர்மனி), சுகுமார்(ஜேர்மனி), சிவசிதம்பரம்(ஜேர்மனி), மங்களேஸ்வரன்(பிரான்ஸ்), சுதாஜினி(லண்டன்), செல்வநிதி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

டனிலா, நிரோஷி, பிரியந்தன், செந்தூரன், ஜனனி, பிருந்தா, ஜெகதீஸ், கோபிதன், ஆரணி, நிஷோக், விதுஷன், அதிஷா, நிருஷிகன், ஆருஷா, தனுஷிகன், ஆதிஷன், அஸ்விகன், நிதிஸ்கா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

வைஸ்ணவி, ஐஸ்வர்யா, மிதிரா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 01-11-2022 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் பிள்ளையார் கோவிலடி சித்தம் தோட்டம் கந்தரோடை சுன்னாகம் எனும் முகவரியில் நடைபெற்று பின்னர் கந்தரோடை சங்கம்புலவு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

நிரஞ்சன் - மகன்
நிமலராஜன் - மகன்
சிவா - மருமகன்

Photos

Notices