Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மண்ணில் 29 JUN 1961
விண்ணில் 09 APR 2024
திரு குமாரசாமி சிவராஜா (சிவாஜி)
வயது 62
திரு குமாரசாமி சிவராஜா 1961 - 2024 புலோலி, Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். வடமராட்சி வல்லிபுரம் புலோலியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Mönchengladbach ஐ வசிப்பிடமாகவும் கொண்ட குமாரசாமி சிவராஜா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

நெஞ்சம் மறக்கமுடியவில்லை அண்ணா
உம் நினைவுகளை

 வடமராட்சி மண் தந்த புத்திரனே
வல்லிபுரம் பதியில் உதித்த உத்தமரே
அன்பின் பிறப்பிடமாய்
பாசத்தின் சிறப்பிடமாய்
 இரக்கத்தின் காருண்யமாய்
 அகிலத்தில் வாழ்ந்த என் அண்ணாவே

 தேவை என எண்ணுகையில்
தேடிவந்து உதவிடும் எண்ணம் கொண்டவரே
வஞ்சமில்லா உன் பேச்சில்
பலர் மனதில் நிறைந்திருப்பீரே
 விழியினாலே பேசி சிரித்திருப்பீர் -இருக்கும்
இடத்தினை கலகலப்பாய் மாற்றிடுவீர்
நண்பர்களை கூட்டமாய் சேர்த்திடுவீர்
 நட்புக்கு இலக்கணவாய் வாழ்ந்திருந்தீர்.

 அண்ணனாய், தந்தைபோல் பாசத்தை
பகிர்ந்து கொண்டீர்- அந்த பால் முகத்தை இனி எங்கே காண்பேனோ
பலபொழுதுகள் பலகதைகள்
 உரையாடி மகிழ்ந்திருந்தோம்
 தங்கைச்சி தங்கைச்சி என்று அடிக்கடி அழைக்கும் குரலை
 இனி எங்கே நான் கேட்பேனோ?
மாமா மாமா என்று தேடும் பிள்ளைகளுக்கு
என்ன பதில் சொல்வேனோ?

 எண்ணற்ற நினைவலைகள் 
என் நெஞ்சில் அண்ணா
உங்களுடன் நான் வாழ்ந்த
வாழ்க்கை ஒரு தசாப்தம்.
அண்ணன் தங்கை பாசம் இதுவல்லோ
என்று மெய்க்கும் அளவுக்கு நம்பந்தம்
இதில் கறுப்பு புள்ளியாய் காலன் ஏன் வந்தாரோ..?


 உறவென்றால் உங்களைச் சொல்வேன்
உயிரென்றால் சிவாஜி அண்ணா என்பேன்
 தங்கையென நான் இருக்க
 அண்ணா நீங்கள் அவசரப்பட்டு போனதேனோ?
வந்துவிடு சிவாஜி அண்ணா
வலிக்கிறது நெஞ்சமெல்லாம்
உம் பிரிவை என்னால் நம்பமறுக்கிறது
நாசமத்த உள்ளமது

 உம் வரவால் எம் குடும்பம்
மகிழ்ந்திருந்த பொழுதுகள்
உம் பிரிவால் எம் நெஞ்சம்
இருள் மூழ்கி விட்டதுவே
வழிநெடுகத் தேடுகிறேன்-உன்
 விழிப்பார்வை யகப்படுமா?
அழுதழுது தேடுகிறேன்
அண்ணா நீ வந்துவிடு
தாங்க முடிவில்லை தவிக்கிறது
 என் உள்ளம்.
 நீங்கள் இன்றி நான் என்
செய்வேன் இறைவா...

 உமது உருவந்தான் மறைந்து போகும்
உம் நினைவுகள் என்றும் எம்முடனே
 என்றும் மறவா நினைவுத்துயருடன்
தங்கை (தங்கைச்சி) உமா.
ஓம் சாந்தி ஓம் சாந்தி!!!

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 4 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

Summary

Notices

மரண அறிவித்தல் Sat, 13 Apr, 2024