31ம் நாள் நினைவஞ்சலி


அமரர் குகநேசமலர் பொன்னுதுரை
1943 -
2020
உரும்பிராய் தெற்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
1
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். உரும்பிராய் தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த குகநேசமலர் பொன்னுதுரை அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.
நாம் பிறந்தது முதல் எம் பெற்றோருடன்
சேர்ந்து எம்மை வளர்த்த அன்புத் தாயே!
நாம் எம் பெற்றவர்களை இழந்து நின்ற போது
ஈரைந்து வருடங்கள் அவர்களுக்கு இணையாக
எம்மை தாங்கி பாதுகாத்த இதயத் தாயே!
அன்பு, கருணை, பொறுமை நிறைந்த
தெய்வச் சுடரே - இனி
எங்கே உங்களை காண்போம் அம்மா!
நாட்கள் தான் 31 ஓடி மறைந்தது
அம்மாச்சி உங்களை இழந்த வலி, வடுக்கள்
இன்னும் மாறவில்லை, ஆறவில்லை
மாறாதம்மா ஆறாதம்மா.....
இனி எங்கே எப்போது காண்போம் அம்மா!!!
உங்கள் ஆத்மா சாந்தி அடையட்டும் அம்மா!!!
உங்கள் பிரிவால் வாடும் பிள்ளைகள், மருமக்கள்,
பேரப்பிள்ளைகள், வதனா - ஸ்ரீரங்கநாதன் குடும்பம்,
குகா - பாலேந்திரன் குடும்பம்
தகவல்:
குடும்பத்தினர்