Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 22 JUN 1950
மறைவு 08 FEB 2022
அமரர் கிருஷ்ணர் ஆறுமுகம்
உத்தரவு பெற்ற நில அளவையாளரும், காணி நிர்வாகத் திணைக்கள உத்தியோகத்தர், விரிவுரையாளர் தொழில்நுட்பக்கல்லூரி, திருகோணமலை
வயது 71
அமரர் கிருஷ்ணர் ஆறுமுகம் 1950 - 2022 மட்டுவில் வடக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 17 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். மட்டுவில் வடக்கைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை பாலையூற்று கண்டிவீதியை வசிப்பிடமாகவும் கொண்ட கிருஷ்ணர் ஆறுமுகம் அவர்கள் 08-02-2022 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கிருஷ்ணர், சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கர்ணலிங்கம், கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சற்குணதேவி அவர்களின் பாசமிகு கணவரும்,

துஷ்யந்தி(லண்டன்), கஜமுகி, இந்துஜா(லண்டன்), தீனுஜன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற வடிவேலு, மகாலிங்கம், சோமசுந்தரம், சேதுப்பிள்ளை, காலஞ்சென்ற மங்கையற்கரசி, மீனாட்சி, காலஞ்சென்ற திருச்சிற்றம்பலம், பரஞ்சோதி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

சசிகுமார்(லண்டன்), ராஜ்காந், வேல்நிதி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஆதர்ஷ்(லண்டன்), அக்‌ஷயன், ஜஷ்விந்த், காரனியா(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 1272B, கண்டி வீதி, பாலையூற்றில் உள்ள அவரது இல்லத்திலிருந்து எடுத்துச்செல்லப்பட்டு பின்னர் பாலையூற்று பொது மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live Streaming Link:- Click Here

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

துஷ்யந்தி - மகள்
சசிகுமார் - மருமகன்
கஜமுகி - மகள்
இந்துஜா - மகள்
நிதி - மருமகன்
ராஜ் - மருமகன்

Photos

Notices