Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 20 AUG 1948
இறப்பு 13 AUG 2020
அமரர் பரமேஸ்வரி கிருஸ்ணமூர்த்தி
வயது 71
அமரர் பரமேஸ்வரி கிருஸ்ணமூர்த்தி 1948 - 2020 தெல்லிப்பழை, Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ்.தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், சுன்னாகத்தை வதிவிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி கிருஸ்ணமூர்த்தி அவர்கள் 13-08-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தாமோதரம்பிள்ளை, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற ஆறுமுகம், பார்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

கிருஸ்ணமூர்த்தி(முன்னாள் பண்டத்தரிப்பு, நல்லூர் பல நோக்குக் கூட்டுறவுச் சங்க கிளை முகாமையாளர்) அவர்களின் ஆருயிர் மனைவியும்,

ஞானகௌரி (கௌரி, ஜேர்மனி), றவிக்குமார்(ஜேர்மனி), சிவகௌரி(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

கண்ணன்,பகீதரன்,சரன்யா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற விஜயரட்ணம், நடராஜா, சறோஜாதேவி, வரதராஜா, பத்மாவதி, ஜெயந்தி, விக்கினேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற இராஜதுரை, பூமாதேவி, ஞானாம்பிகை, ஆனந்தராஜா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சஞ்சய், காயத்திரி, அருளினி, கரிராம், ஜானுகா, சந்தோஷ், இஷானி, ஆகியோரின் செல்லப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 16-08-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் கதிரமலைச்சிவன்கோவிலடி , சுன்னாகம் எனும் முகவரியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று, சுன்னாகம் கொத்தியாலடி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Sat, 12 Sep, 2020