Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 17 JUL 1962
இறப்பு 06 SEP 2020
அமரர் கிருஸ்ணகோபால் பாலச்சந்திரன்
வயது 58
அமரர் கிருஸ்ணகோபால் பாலச்சந்திரன் 1962 - 2020 எழுதுமட்டுவாள் தெற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். எழுதுமட்டுவாள் தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கிருஸ்ணகோபால் பாலச்சந்திரன் அவர்கள் 06-09-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கிருஸ்ணகோபால் செல்லம்மா தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, தவமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கிருபாதேவி அவர்களின் பாசமிகு கணவரும்,

கோவரதன், கௌசிகன், தாட்சாயினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

செல்வமலர், கிருஸ்ணகரன், கிருஸ்ணவரன், செல்வறஞ்சினி, செல்வராஜினி, காலஞ்சென்ற கிருஸ்ணகோபன், செல்வரஜனி, செல்வராகினி, செல்வஅஜந்தா ஆகியோரின் பாசமிகு மூத்த சகோதரரும்,

தனுசா, சஞ்சிகா ஆகியோரின் பாசமிகு மாமனாரும், 

இராசதுரை வசந்தரூபி, ஜெனிதா, ஆனந்தராசா, சசிகரன், சதீஸ், சேகர், கிருஸ்ணகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

திருவேந்தன், டிஷாந், இனுசியா, கிருத்திகன், கிருஷாந், கிருசோன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

பிரியங்கா, சாயிதா, டயானான், லக்சிகன், திசானி, சயானி, சகீரன், ஆரகி, சந்தோஸ், சாதுரி, சஜிதன் ஆகியோரின் அன்பு பெரிய மாமாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 07-09-2020 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் எழுதுமட்டுவாள் இராமியன் இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்