1ம் ஆண்டு நினைவஞ்சலி


அமரர் கிட்டினர் ஏகாம்பரம்
1945 -
2021
இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Sri Lanka
Sri Lanka
Tribute
5
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
திதி:14-08-2022
யாழ். உடுப்பிட்டி இலந்தைக்காட்டைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கிட்டினர் ஏகாம்பரம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு ஒன்று ஓடி மறைந்ததப்பா
ஆனாலும் எங்கள் கண்களில்
வழிந்த நீர் காயவில்லை
எம்முயிரான எங்களப்பாவே
உங்களோடு மட்டுமல்ல- உந்தன்
நினைவோடும் வாழக்கற்றுத் தந்துவிட்டு
நீங்கள் சென்றுவிட்டீர்கள்...
முகம் பார்க்க ஏங்கி ஏங்கியே
தவிக்கின்றோம் எம் அன்பு அப்பாவே!
உங்கள் சிரித்த முகம்
பார்க்காமல் தவிக்கின்றோம்
பாதி வழியில் பாசங்களை அறித்தெறிந்து
தூர நீங்கள் சென்றதேனோ!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குசலன்(மருமகன்)