யாழ். புலோலி தெற்கு நயினாவத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட கதிர்காமு சபாநாதன் அவர்களின் அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் அந்தியேட்டிக் கிரியை எதிர்வரும் 26-02-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 06:00 மணியளவில் கீரிமலை புண்ணிய தீர்த்தக்கரையில் நடைபெற்று, சபிண்டீகரணக் கிரியையும், ஆத்மசாந்திப் பிரார்த்தனையும் பகல் 11:00 மணியளவில் அன்னாரின் இல்லத்திலும் நடை பெறவுள்ளதால் அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்ப சகிதம் வருகைதந்து இடம்பெறும் ஆத்ம சாந்திப் பிரார்த்தனையிலும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
முகவரி:
நயினாவத்தை,
பல்லப்பை,
புலோலி தெற்கு,
புலோலி.