யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம் மாரியம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கோண்டாவிலை வசிப்பிடமாகவும், கிளிநொச்சியை வதிவிடமாகவும் கொண்டிருந்த கதிர்காமு குணேஸ்வரி அவர்களின் 30ம் ஆண்டு நினைவஞ்சலி.
பிறப்பு :
06 Aug, 1936
இறப்பு :
10 Feb, 1996
யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம் மாரியம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கோண்டாவிலை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இராமலிங்கம் கதிர்காமு அவர்களின் 31ம் ஆண்டு நினைவஞ்சலி.
பிறப்பு : 12 யூலை 1925
இறப்பு : 30 மே 1995
நீங்காத நினைவுகள் தந்து
நீண்ட தூரம் சென்று ஆண்டுகள் 30 கடந்தாலும்
ஓயவில்லை உங்களின் நினைவுகள்
அகலவில்லை அம்மாவின் அன்பு முகம்!
உங்கள் புன்சிரிப்பும் பாசம் நிறைந்த
அரவணைப்பும் எங்களை ஒவ்வொரு
பொழுதும் ஏங்க வைக்கின்றது அம்மா
உலகமும் நிஜமில்லை, உறவுகளும் நிஜமில்லை
என்றுணர்ந்தோம் உங்களின் இழப்பால்..
இறைவனும் இரக்கமற்றவன்
என்றுணர்ந்தோம் உங்களின் இறப்பால்!
காலங்கள் தான் போனதம்மா
உனைப் பிரிந்த வேதனை
இன்னமும் குறையவில்லையம்மா
உன் உடல் தான் மறைந்ததம்மா
கண்மூடித்திறக்கும் முன் எம்மை விட்டுப் பிரிந்து
30 ஆண்டுகள் ஆனதம்மா
உங்கள் பிரிவுதன்னை எம்மனங்கள்
ஏற்க மறக்குதம்மா
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
குடும்பத்தினர்