

திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், சேனையூர் மூதூர், முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு, யாழ். பருத்தித்துறை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், இறுதியாக லண்டன் Catford Lewisham ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த கதிர்காமத்தம்பி இலட்சுமிப்பிள்ளை அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
நீங்காத நினைவுகள் தந்து
நீண்ட தூரம் சென்று
ஆண்டுகள் பத்து கடந்தாலும்
ஓயவில்லை உங்களின் நினைவுகள்
அகலவில்லை அம்மாவின் அன்பு முகம்!
உங்கள் புன்சிரிப்பும் பாசம் நிறைந்த
அரவணைப்பும் எங்களை ஒவ்வொரு
பொழுதும் ஏங்க வைக்கின்றது அம்மா
உலகமும் நிஜமில்லை, உறவுகளும் நிஜமில்லை
என்றுணர்ந்தோம் உங்களின் இழப்பால்..
இறைவனும் இரக்கமற்றவன்
என்றுணர்ந்தோம் உங்களின் இறப்பால்!
காலங்கள் தான் போனதம்மா
உனைப் பிரிந்த வேதனை
இன்னமும் குறையவில்லையம்மா
உன் உடல் தான் மறைந்ததம்மா
கண்மூடித்திறக்கும் முன்
எம்மை விட்டுப் பிரிந்து
பத்து ஆண்டுகள் ஆனதம்மா
உங்கள் பிரிவுதன்னை எம்மனங்கள்
ஏற்க மறக்குதம்மா
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
13-06-2025 வெள்ளிக்கிழமை அன்னாரின் பத்தாம் ஆண்டு நினைவு தினத்தன்று காலையில் லண்டன் லூசியம் சிவன் ஆலயத்தில் இறந்தவருக்காக செய்யப்படும் மோட்ச அர்ச்சனை பூஜை பரிகாரங்கள் செய்து மதியம் திருகோணமலை அன்னை சாரதா இல்ல பிள்ளைகளுக்கு மதிய போசன உணவளித்து வளிபாடும் செய்து இரவு வீட்டில் படையல் வைத்து அவருக்கான பூஜை வளிபாடும் நடைபெறும்.