Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 21 APR 1938
இறப்பு 18 SEP 2020
அமரர் கதிரித்தம்பி குணராஜாசேகரம்
ஓய்வுபெற்ற பொலிஸ் உத்தியோகத்தர், அகில இலங்கை சமாதான நீதவான்
வயது 82
அமரர் கதிரித்தம்பி குணராஜாசேகரம் 1938 - 2020 Vasavilan, Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். வசாவிளானைப் பிறப்பிடமாகவும், கொழும்பு மட்டக்களப்பு, உடுப்பிட்டி, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கதிரித்தம்பி குணராஜாசேகரம் அவர்கள் 18-09-2020 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், கதிரித்தம்பி சின்னத்தங்கச்சி தம்பதிகளின் அன்பு மகனும், குமாரசாமி கனகாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

செளபாக்கியலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,

தர்மினி(கனடா), மதிவதனி(பிரான்ஸ்), காலஞ்சென்ற பவானி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சண்முகராஜா(கனடா), இதயசேகர்(பிரான்ஸ்), ஜெயலால்(வத்தளை பொலிஸ் உத்தியோகத்தர்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்ற சற்குணம், தர்மசேகரம், பாவநாசசிவம்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

சண்முகம் மகேஸ்வரி அவர்களின் அன்பு மைத்துனரும்,

திவங்காஹர்ஜித், சகானா, நுசிதன்(கனடா) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 20-09-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் நடைபெற்று பின்னர் உடுப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்