10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
3
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Mulheim என்ற இடத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கதிரவேலு சுப்பிரமணியம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 22-04-2023
இன்றும் மீளாத்துயரத்தில் நாங்கள் எல்லோரும்
இருக்கையிலே பத்தாவது ஆண்டும் ஓடியது
உங்கள் அன்பு முகம் காணாத கண்கள் தேடுகின்றன!
ஐயோ என்றழுதேன் ஐயன் என்றழுதேன்
யாரும் எமக்கருள நினைக்கவில்லையே!
பத்தாண்டு அழுத வண்ணமிருக்க
நம்மை ஆண்டவன் மட்டும் நம்முடனில்லை
எங்கள் உயிர் மூச்சாய்
எம்மோடு வாழ்ந்திருந்த ஐயாவே
எமையெல்லாம் விட்டு
இறைவன் அருகில் சென்றீரோ!
நீங்கள் எமக்கு ஊட்டியவைகள் எல்லாம்
நித்தம் நினைவில் வந்து வந்து
எம்மை நெறிப்படுத்தி செல்கின்றன
நிதானமுடன் அவ்வழியே பயணிக்கின்றோம்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய என்றும்
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்