

யாழ். ஊர்காவற்துறை தம்பாட்டியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Pontault Combault ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கதிரவேலு சிவகுமார் அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு ஏழு ஆனாலும்
மனம் ஆற மறுக்கிறது சிரித்த
முகத்தோடும் செயற்திறன்
தன்னோடும் செம்மையாய் வாழ்ந்த !
ஆண்டு ஏழு கடந்தாலும் ஆறிடுமோ
உங்கள் நினைவலைகள் !
கண்ணின் மணி போல் எம்மைக்
காத்த அன்புத் தெய்வமே ஆறிடுமோ
எங்கள் துயரம் விதித்ததோர் விதியதால்
விண்ணகம் சென்றதைப்
பொறுத்திடத்தான் முடியுமோ? அப்பா,
உங்கள் அன்பு முகம் மறைந்தாலும்
அழியாது நினைவலைகள்!
வானில் சிந்திடும் துளியில்
மண்ணில் பயிர்கள் துளிர்விடும்
எங்கள் விழிகள் சிந்திடும்
துளியின் வழியில் உங்களை
கண்டிட முடியாதோ..!
ஏழு ஆண்டுகள் ஓடி மறைந்தாலும்
உங்கள் நினைவுகள் எங்கள் மனதில்
என்றென்றும் நிறைந்திருக்கும்..!
பாசத்தின் பிறப்பிடமாய்
பாரினிலே நேசத்துடன் எங்களை
ஆளாக்கி நேர்மையுடன்
வாழ்ந்தீர்களே அப்பா!
உங்கள் ஆத்மா சாந்தி அடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!