Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 31 MAR 1975
இறப்பு 15 FEB 2023
அமரர் சாம்பசிவம் நர்மதா 1975 - 2023 கிளிநொச்சி திருவையாறு 1ம் வட்டாரம், Jaffna, Sri Lanka Sri Lanka
Tribute 11 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

கிளிநொச்சி இல 15/1, திருவையாறு 1 ஆம் பகுதியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Aarau வை வசிப்பிடமாகவும் கொண்ட சாம்பசிவம் நர்மதா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

வரமென என் வாழ்வில் வந்த தாயே
காலன் உன்னைக் காவுகொண்டு ஆண்டு
ஒன்று ஆனதுவோ நம்ப முடியவில்லை
உங்கள் நினைவால் நாம்
நாளும் தவிக்கின்றோம் - அம்மா!

நாம் சேர்ந்து சிரித்த நாட்களை
எண்ணி அழுகின்றோம்
சேர்ந்து கதைக்கவும் முடியாது என்பதால்
கல்லறை வரை மறையாத
களங்கமற்ற பாசம் காலவதியாகி
ஓராயிரம் ஆண்டு சென்றாலும்
இழக்க முடியாத நேசம் நீங்கள் அம்மா!

நெஞ்சம் நெகிழ வைக்கும் அன்பு!
ஆண்டு ஒன்று ஆனாலும் உயிரை உலுக்கி
நடுங்க வைத்த பிரிவு!

நாம் மறைந்தாலும் அழியாத நீங்கள்
நடந்த தெய்வீகப் பயணம்
உறைந்து போன பௌர்ணமியில் உதிராமல்
மலர்ந்தே இருக்கும்
எம் மனத்திரையில் என்றும்!

கடந்துவிட்ட வருடங்களில்
கலங்காத நாட்களில்லை
நீங்கள் இருக்கும் போது
ஆனந்தக் கண்ணீர் தந்த விழிகள்
இப்பொழுது தூக்கம் தொலைத்து
கண்ணீர் வடிக்குதம்மா

உங்கள் ஆத்மா சாந்தி அடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தங்கள் பிரிவால் வாடும்
தாய், பிள்ளைகள், சகோதரன், சகோதரிகள்,
மைத்துனர்கள், மைத்துனி, பெறாமக்கள்...


அன்னாரின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி & மதிய போசன நிகழ்வு 09-03-2024 சனிக்கிழமை அன்று மு.ப 11:00 முதல் பி.ப 03:00 மணிவரை baba Banquet Hall unit B 3300 McNicoll Ave, Sarborough, ON M1V 5J6 எனும் முகவரியில் நடைபெறும் அத்தருணம் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் கலந்துக்கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

 எங்கள் சகோதரியின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எங்கள் குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 



தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்