

யாழ். கோண்டாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், இல.5, இராமகிருஷ்ணா அவென்யூ, கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட கருணாதேவி குகானந்தன் அவர்கள் 06-06-2025 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் சரஸ்வதி தம்பதிகளின் கனிஷ்ட புத்திரியும், திரு. திருமதி நடராஜா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற குகானந்தன் அவர்களின் அன்பு மனைவியும்,
புவனேஸ்வரி, காலஞ்சென்ற விமலாம்பிகை, சரோஜினிதேவி, காலஞ்சென்ற நித்தியமலர், சுந்தரலிங்கம், சகுந்தலாதேவி, காலஞ்சென்ற யோகலிங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்ற கணேசன், பாஸ்கரன், ஆனந்தலிங்கம், சோதிநாதன், வசந்தமலர், காலஞ்சென்ற பரதராஜா, பாலேஸ்வரி, ரஞ்சினி, சிவராஜன், சிவானந்தன், ராஜி ஆகியோரின் அன்புமிகு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 08-06-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று மகிந்த மலர்ச்சாலையில் மு.ப 09:00 மணிமுதல் பி.ப 02:30 மணி வரை பார்வைக்காக வைக்கப்பட்டு பி.ப 03:00 மணியளவில் கல்கிசை பொதுமயானத்தில் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.