யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், சாவச்சேரியை வசிப்பிடமாகவும் கொண்ட கார்த்திகேசு செல்வராசா அவர்கள் 26-05-2026 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார். அன்னாரின் நினைவாக
கண்ணீர் கடலில் எங்களை மூழ்கடித்து,
விண்ணகப் பாதைக்கு விரைந்தது ஏனோ?
கார்த்திகேசு செல்வராசா என்னும் பேரன்பே,
உம் பிரிவு எங்களை வாட்டுதே ஏனோ!
'உதயம்' என்று உம்மை அழைத்தோம்,
எங்கள் வாழ்வில் ஒளியாய் நீர் இருந்தீர்.
தோற்றம் தந்த அந்த ஜூன் பதினான்கில்,
நல் வழியைக் காட்ட நீர் பிறந்தீர்.
ஆண்டுகள் எழுபத்து எட்டு எங்களோடு,
அன்பின் இலக்கணமாய் வாழ்ந்து நின்றீர்.
மே இருபத்தி ஆறில் மறைந்தாலும்,
எங்கள் நெஞ்சக் கூட்டில் என்றும் வாழ்வீர்.
வியர்வை சிந்தி எங்களை வளர்த்தீர்,
விழுமியங்கள் பலவற்றை கற்றுத் தந்தீர்.
உம் புன்னகை முகம் எழில் ஓவியமாய்,
எங்கள் நினைவலைகளில் என்றும் மிதக்கும்.
ஆறாத் துயரில் தவிக்கின்றோம் நாங்கள்,
ஆறுதல் சொல்ல யாரும் இல்லை இங்கே.
சென்று வாருங்கள் எங்கள் வழிகாட்டியே,
உம் ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறோம்...
தொடர்புகளுக்கு
- Mobile : +94769872525