யாழ். மயிலிட்டி தெற்கு கட்டுவனைப் பிறப்பிடமாகவும், உடுவிலை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கந்தவனம் அருமைத்துரை அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 26-12-2023
ஆண்டு பத்தாகியும்எங்களால் ஆறமுடியவில்லைஉங்கள் பிரிவால்வடியும் கண்ணீரும் காயவில்லை
பாசமழை பொழிந்துநேசமாய் எமை வளர்த்துதுணிவுடனே நாம் வாழவழியதனைக் காட்டிவிட்டுஎமைவிட்டு சென்றதெங்கே?
நீண்ட தூரம் சென்று விட்டீர்எமைக் காக்க யாருண்டுஎத்தனை உறவுகள் சூழ்ந்திருந்தாலும்அத்தனையும் உமக்கு ஈடாகுமா?
நல்வழி காட்டிய தந்தையேஉமை மறக்க முடியவில்லைஉம் பிரிவுத்துயர் தீரவில்லை
உங்கள் ஆத்மா சாந்தியடையஇறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...உங்கள் பிரிவால் வாடும் குடும்பத்தினர்,பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்.
அமரர் கந்தவனம் அருமைத்துரை நினைவஞ்சலிப் பிரார்த்தனை 26-12-2023 செவ்வாய்க்கிழமை அன்று தெல்லிப்பளை துர்க்கையம்மன் ஆலயத்தில் நடைபெறும்.