🌺🙏🏽 றூபன் அண்ணா! 🙏🏽🌺 சுயநலம் நிறைந்த இந்த உலகில், பொதுநல எண்ணத்தோடும் மனிதநேயப் பண்புகளோடும் வாழ்ந்த அரிய மனிதர் நீங்கள். எவரிடமும் பாகுபாடின்றி, பாசத்துடனும் புன்னகையுடனும் பழகிய உங்கள் அன்பான குணம் என்றும் நினைவில் நிற்கும். ❤️ என் மகனும் திறம்மன் விளையாட்டுக் கழகத்தின் ஊடாக, உங்கள் அர்ப்பணிப்புமிக்க கால்பந்து பயிற்சிகளில் பங்கேற்று, கால்பந்து விளையாட்டின் மீது ஆர்வமும் நேசமும் வளர்த்துக்கொண்டான். அந்த விதையை அவன் மனதில் விதைத்தவர்களில் நீங்களும் ஒருவர். ⚽🏃♂️💚 உங்கள் அன்பிற்கும், அர்ப்பணிப்பிற்கும், இளம் தலைமுறைக்காக செய்த சேவைகளுக்கும் இதயப்பூர்வமான நன்றிகள். 🙏🏽🌹 அன்பு றூபன் அண்ணா, உங்கள் ஆன்மா இறைவனின் திருவடியில் நித்திய அமைதியும் பேரின்பமும் பெற இறைவனை மனமார வேண்டுகிறேன். 🕊️🤍 ஓய்வெடுங்கள் அண்ணா… உங்கள் நினைவுகள் என்றும் எங்களுடன் வாழும். 🌺🕯️🙏🏽 🌹 ஆழ்ந்த இரங்கல்கள் 🌹 🌺 ஓம் சாந்தி 🌺