12ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
0
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். துன்னாலை தெற்கு கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், கோயிற்கடவை துன்னாலை மத்தியை வதிவிடமாகவும் கொண்டிருந்த கந்தர் வேலாயுதம் அவர்களின் 12ம் ஆண்டு நினைவஞ்சலி.
நீங்கள் எம்மை விட்டு பிரிந்து
பன்னிரண்டு ஆண்டு ஆன போதும்
உமை நாங்கள் இழந்த துயரை
ஈடு செய்ய முடியாமல் தவிக்கின்றோம்-அப்பா
தன்னை உருக்கி பிறருக்கு ஒளி கொடுக்கும்
மெழுகுவர்த்தி போல்
உம்மை உருக்கி எம்மை காத்து
வந்த தெய்வமே...
நீங்கள் எங்களோடு வாழ்ந்த
காலமெல்லாம் பொற்காலம் - நீவீர்
பிரிந்த காலமெல்லாம் எம் கண்களில்
நீர்க்கோலம்
இன்று நம் கண்ணீர் நிறைந்த
கண்கள் உம்மை தேட
எம் மனமோ உங்களின்
அன்புக்காய் ஏங்கித் தவிக்கிறதே!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
புஸ்பதேவி(மகள்),முரளிதாசன்(மகன்)
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute