
யாழ். வேலணை கிழக்கு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னை கே.கே நகரை வசிப்பிடமாகவும், தற்போது யாழ். அரசடி வீதியை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா செல்வராசா அவர்கள் 24-03-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இளையதம்பி கந்தையா பொன்னம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற தனுஸ்கோடி சண்முகம், பூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
புஸ்பலஷ்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
அபர்ணா(யமுணா- கனடா), பிரார்த்தனா(ரூபா- பிரான்ஸ்), நர்தனா(லக்சி- யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
இன்பா(ரதன் AJR- கனடா), மகிந்தன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான நாகராசா(Master Velanai Central), தியாகராசா, தங்கராசா, யோகராசா, லீலாவதி, மற்றும் தவமணிதேவி(ஐக்கிய அமெரிக்கா), லலிதாதேவி(வேலணை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற திவ்யசிரோன்மணி, லக்சுமி(கொழும்பு), காலஞ்சென்ற இராசலச்சுமி, அலிஸ்(யாழ்ப்பாணம்), காலஞ்சென்றவர்களான சிவபாலசிங்கம், சிறீதரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான துரைசாமி, நடராசா, மற்றும் தனலட்சுமி(கனடா), காலஞ்சென்ற தர்மபுத்திரன், அமரசிங்கம்(கிளிநொச்சி), சரஸ்வதி(கனடா), மகேந்திரன்(கனடா), செல்வநாயகம்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகலனும்,
அதிரா(கனடா), காலஞ்சென்ற பவின்(கனடா), ஜெனிகா(கனடா), சகான்(கனடா), நித்திலன்(பிரான்ஸ்), பிரீத்திகா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 24-03-2019 ஞாயிற்றுக்கிழமை முதல் 26-03-2019 செவ்வாய்க்கிழமை வரை அவரது இல்லத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டு, அதனைத்தொடர்ந்து இறுதிக்கிரியை 27-03-2019 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர், கோம்பயன்மணல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
My heart felt condolence