Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 29 OCT 1942
மறைவு 11 OCT 2024
திரு கந்தையா குமாரசிங்கம்
ஓய்வுபெற்ற Executive உத்தியோகத்தர் ACI Ltd
வயது 81
திரு கந்தையா குமாரசிங்கம் 1942 - 2024 சங்கரத்தை, யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். சங்கரத்தை குளத்தடியைப் பிறப்பிடமாகவும், மானிப்பாயை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா குமாரசிங்கம் அவர்கள் 11-10-2024 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை அன்னமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற நாகேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,

காலஞ்சென்றவர்களான பொன்னம்மா, மகேஸ்வரன்(இலங்கை போக்குவரத்து சபை முன்னாள் உத்தியோகத்தர்) மற்றும் வீரபத்திரன் சந்தானலட்சுமி(சுவிஸ்), தர்மலிங்கம்(ஓய்வுபெற்ற CDOA நீர்பாசனத் திணைக்களம்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

ஆதவன்(IT விரிவுரையாளர், ATI), தாரணி(கனடா), ஆரணி(ஆசிரியர்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான இராசதுரை- அன்னபூரணம், கெங்காதரன் - சரஸ்வதிதேவி ஆகியோரின் பாசமிகு சம்மந்தியும்,

சுகுணன்(கனடா), லதன்(பொது சுகாதார பரிசோதகர், தெல்லிப்பளை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஓவியா, விவேகன், அற்புதா, ஆதிரன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்றவர்களான சின்னத்துரை, இராசதுரை(விமானக்கட்டுப்பாட்டாளார் கட்டுநாயக்கா- Airport Controller), செல்வரட்ணம், குமாரவேலு(பொறியியலாளர்- நீர்பாசனத் திணைக்களம்), சுப்பிரமணியம், அன்னம்மா, வைத்திலிங்கம் சரஸ்வதி மற்றும் சிவசுப்பிரமணியம் அன்னலட்சுமி, பரராகசிங்கம் மகேஸ்வரி, கந்தசாமி குணமணி, செல்வி கணபதிப்பிள்ளை தவமணி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 15-10-2024 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பிப்பிலி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

வீட்டு முகவரி:
ஆஸ்பத்திரி ஒழுங்கை,
மானிப்பாய்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ஆதவன் - மகன்
தாரணி - மகள்
லதன் - மருமகன்
ஆரணி - மகள்

Photos

Notices