

திதி: 20-06-2025
யாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி திருநகரை வதிவிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கண்ணம்மா சண்முகநாதன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
ஓராண்டு நினைவலைகள்
அம்மா நீங்கள் எம்மை விட்டுப்பிரிந்து
ஆண்டொன்று உருண்டோடி விட்டது
அம்மாவின் அன்புக்கு ஈடாக இவ்வுலகில் ஏதுமில்லை
உம்மைப் போல அரவணைக்க யாருமில்லையே
நீங்கள் ஈன்றெடுத்த பிள்ளைகள் நாம்
வெவ்வேறு திசைகளில் நிர்க்கதியாகிவிட்டோம்
உங்கள் வாழ்த்துக்கள், பாராட்டுக்கள் அறிவுரைகள்
இல்லாமல் தளர்ந்து போகின்றோம் அம்மா
ஆண்டவன் அழைப்புக்கு யாம் என்செய்வோம் அம்மா
வாழும் காலத்தில் உம்மைப் போல்
இரக்கம், கருணை, பாசம், அன்பு, ஈகை, விரும்தோம்பல்
தெய்வபக்தியோடு நீர் காட்டிய மாதிரியைப்
பின்பற்றி நடப்போம் அம்மா
நீங்கள் மறைந்து விட்டாலும்
உங்கள் நினைவுகள் எங்கள்
இதயத்தில் இருந்து இருபோதும் அழியாது
உங்கள் ஆன்மா நிம்மதியாக இறைவன்
திருவடி நிழலில் சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்.
உங்கள் நினைவால் வாடும்
சண்முகநாதன்(கணவர்), வசந்தி, ஜெயந்தி, சுகந்தி, பாசநேசன், ஆனந்தி,
மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்
❤️?❤️I MISS YOU KANNAMMAH❤️❤️? ❤️❤️I LOVE YOU KANNAMMAH ❤️❤️ ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️