Clicky

மரண அறிவித்தலும், நினைவஞ்சலியும்
அன்னை மடியில் 10 JUN 1922
இறைவன் அடியில் 12 JUN 2023
திருமதி கணேசபாக்கியம் செல்லத்தம்பி
வயது 101
திருமதி கணேசபாக்கியம் செல்லத்தம்பி 1922 - 2023 வல்வெட்டித்துறை, Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். காட்டுவளவு வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை, இந்தியா, இலண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கணேசபாக்கியம் செல்லத்தம்பி அவர்கள் 12-06-2023 திங்கட்கிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லத்தம்பி அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் அம்மாள் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தம்பிஐயா பொன்னம்மாள் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற செல்வநாச்சியார் அவர்களின் மைத்துனியும்,

நித்தியலட்சுமி(செல்வம்- இலண்டன்), செல்வானந்தம்(குமார்- சிங்கப்பூர்), வரலட்சுமி(கலா- இலண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற சண்முகானந்தன் மற்றும் யசோதா(சிங்கப்பூர்), மகேந்திரநாதன் (பபி- இலண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்ற சுதரஸ் அம்பிகை அவர்களின் அன்பு மாமியாரும்,

நடனகுருசாமி அவர்களின் சின்னம்மாவும்,

ரவீந்திரன் - மீரா, நரேந்திரன் - தீபா, பாமினி - கிருஷ்ணகுமார், மிருணாளினி - சிறிதரன், சரவணன், கலைவாணி, வினோத் - திலீபனா, மனோஜ் - டனுசா, விவேக் - ஆஸ்தா,மதுமிதா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

நிலா, மேகா, சூர்யா, நிவேதிதா, நிகிலன், மயூரன், செந்தூரன், நிவேதா, நேத்ரா, கரீஷ்மா, விகான், ஷ்ரேயா, தாரா ஆகியோரின் ஆசைப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் அவரின் விருப்பத்திற்கிணங்க மருத்துவப் பல்கலைக்கழகத்திற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இறுதிக்கிரியைகள் நடைபெறாத காரணத்தினால் கீழே தரப்பட்டுள்ள மண்டபத்தில் வரும் 27-06-2023 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் நடைபெறும் பிரார்த்தனை நிகழ்விலும் தொடர்ந்து பி.ப 08:00 மணிவரை நடைபெறும் நினைவஞ்சலி மற்றும் போசன நிகழ்வுகளிலும் கலந்துகொள்ளுமாறு அனைவரையும் அன்புடன் வேண்டிக்கொள்கின்றோம்.

Barnhill Community Centre,
Ayles Road,
Hayes UB4 9HG.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

கலா - மகள்
பாமினி - பேத்தி
மிருணா - பேத்தி