50ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் கந்தையா தில்லையம்பலம்
1928 -
1976
புங்குடுதீவு 9ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
2
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கந்தையா தில்லையம்பலம் அவர்களின் 50ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் ஐம்பதாகியும் உங்களை
இழந்த சோகம் மாறவில்லை அப்பா!
காலங்கள் எவ்வளவு கடந்தாலும் மாறாது
மறையாது உங்கள் அன்பும் பாசமும் அப்பா!
அன்புடையது எதுவும் இல்லை
அருகில் உள்ள எதுவும் அன்பு கொண்டது இல்லை
வாழ்வில் பல உறவுகள் இருந்தாலும்
புரிந்து கொள்ள யாருமில்லை
உங்களை நினைக்காத நாளில்லை
நித்தம் நித்தம் நினைத்து
எம் உள்ளம் தணல் வெடிக்குதையா!
நிஜமான உங்களை எங்கள் அருகில்
வைத்து வாழ ஆசைப்படுகிறோம்
ஆனால் நீங்கள் நிழலைக்கூடத் தராமல்
நினைவுகளைத்தான் தந்துவிட்டுச் சென்றுள்ளீர்...
தகவல்:
குடும்பத்தினர்